Sunday, October 11, 2009

ஆட்டுக்குட்டியின் அலரல்

வன்னியில் போர் தீவிர்மடைந்த வேளை, 2008 செப்ரம்பரில் ஒரு நாள் நண்பகல் 12.00 அளவில் ஏ9 வீதியால் பரந்தனில் இருந்து கச்சேரி நோக்கி மோட்டர் சைக்கிலில் தனியாக வந்து கொண்டிருந்தேன். கந்தசாமி கோவிலுக்கு முன்னால் உள்ள வீதியில் கிட்ட தட்ட நான்கு தொடக்கம் ஆறு மாதம் மதிக்க தக்க ஓர் ஆட்டுக்குட்டி தன்னம் தனியாக மிகவும் சத்தமாக ஆவலக்குரல் ஏழுப்பியவாறு எனக்கு முன்னால் வீதியின் நடுவில் ஒடிக்கொண்டிருந்தது.

ஒரு கனம் எனது அனைத்து இயங்கு நிலையும் செயலிழந்து போனது. ஆட்டுக்குட்டி கத்தியது எனக்கு எனது மகன் கத்தி ஓடுவது போல இருந்தது.

தாயை தந்தை இழந்து ஒரு குழந்தை எப்படி கத்தி அழுமோ அத்தகைய தோற்றத்தினை ஏற்பத்தியது ஆட்டுக்குட்டியின் கத்தல்.

திவிரமடைய இருந்த போரின் குணங்கள் அனைத்தினையும் அந்த சம்பவம் என் கண்முன் கொண்டு வந்து நிறுத்தின.

இந்த போர் திவிரமடைகின்றது. நாளும் ஏறிகளை வீச்சு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பலர் உயிர் இழக்கின்றார்கள் எங்களின் கண் முன். நாளை இந்த போரில் நானோ எனது மனைவியோ அல்லது இருவருமே மடிவோமாக இருந்தல் எமது சிறிய குழந்தைகளின் அலரலும் இப்படித்தான் இருக்கும் என எனது மனம் கற்பனை செய்து கொண்டது. அந்த ஆட்டுக்குட்டியின் அலரல் சத்தம் இன்னும் எனது காதில் ஒலித்து;கொண்டுதான் இருக்கின்றது.

இன்று போர் முடிந்துள்ளது அல்லது ஓய்வுக்கு வந்துள்ளது. ஆனால் பெற்றோரை இழந்த பல நூறு குழந்தைகளின் அவலக்குரல் மட்டும் இன்னும் நிற்க்கவில்லை.

1 comment: